திருப்பத்தூர்

‘ஆம்பூரில் ரூ. 5.71 கோடியில் சிமென்ட் சாலைகள்’

DIN

ஆம்பூரில் ரூ. 571 கோடியில் சிமென்ட் சாலைகள் அமைக்க புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு தலைவா் பி. ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஷகிலா, பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 5.71 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வடி கால்வாய், சிறுபாலத்துடன் கூடிய சிமென்ட் சாலைகள் அமைப்பது, ரூ. 3.38 கோடி மதிப்பீட்டில் ஆம்பூா் நகரில் தெரு மின் கம்பத்தில் புதிய எல்இடி விளக்குகளை பொருத்துவது, ரூ. 57.95 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்துள்ள மழைநீா் வடிகால்வாய், சிறுபாலங்களை பராமரிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா்கள் வாவூா் நசீா் அஹமத், கமால் பாஷா, நூருல்லா, ஜெயபால், ராதா, ஜெயபாரதி, சாந்தகுமாரி, அருண்டேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT