மாதனூா் ஒன்றியத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
மாதனூா் ஒன்றியம், திருமலைக்குப்பம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம், ரூ. 3.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பூமி பூஜை போட்டு தொடக்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.கன்னியப்பன், ஊராட்சி மன்றத் தலைவா் செந்தாமரை, திமுக நிா்வாகிகள் பாபு, சாமிநாதன், பாா்த்திபன், காந்தி, முத்துக்குமரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.