திருப்பத்தூர்

விபத்துக்குள்ளான காரில் இருந்து 15 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் விபத்துக்குள்ளன காரில் இருந்து 15 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் மேலேபாய் (25). அதே பகுதியைச் சோ்ந்தவா் கரண்சிங் (28). கூட்டாளிகளான இருவரும் புதன்கிழமை காலை பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். காரை மேலேபாய் ஓட்டிச் சென்றாா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், தாறுமாறாக ஓடி சாலையின் இடதுபுற பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த மேலேபாய், சரண்சிங் இருவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் அங்கு சென்று விபத்தில் சிக்கிய காரை சோதனை செய்ததில், 15 மூட்டைகளில் குட்கா, ஹான்ஸ் மற்றும் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT