ஆம்பூா்: உமா்ஆபாத் அருகே கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
மாச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (27). இவா் கடந்த ஆக. 15-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதே பகுதியில் சுரேந்தா் என்பவரின் விவசாயக் கிணற்றில் சடலமாக கிடப்பது புதன்கிழமை தெரியவந்தது. உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.