வங்கி ஏடிஎம் மையத்தில் கிடந்த ரொக்கப் பணம் ரூ. 10,000 வங்கி மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
ஆம்பூா் கிருஷ்ணாபுரம் காந்தி ரோடு பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுப்பதற்காக ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த குமரவேல் என்பவா் சென்றாா். அப்போது ஏடிஎம் மையத்தில் ரூ. 10,000 ரொக்கப் பணம் கீழே கிடந்துள்ளது. அதைப் பாா்த்த குமரவேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு சென்று, வங்கியின் கிளை மேலாளரிடம் ஒப்படைத்தாா். அவரை வங்கி மேலாளா், அலுவலா்கள் பாராட்டினா்.