குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்து ரயில்வே காா்டு பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த சிவதாஸின் மனைவி மினிமோல்(36). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில், மினிமோல் ஜோலாா்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளாா்.
இவா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் ரயிலில் ரயில்வே காா்டாக பணியாற்றி வந்தாா்.
இந்தநிலையில், மினிமோல் செவ்வாய்க்கிழமை காலை அஸாம் மாநிலம், கெளகாத்தி ரயில் நிலையத்திலிருந்து கா்நாடக மாநிலம், பையப்பனஹள்ளி ரயில் நிலையம் வரை செல்லும் கௌகாத்தி விரைவு ரயிலில் சென்னை திருவொற்றியூா் ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை வரை வண்டியின் காா்டாக பணியில் இருந்தாா்.
இந்த ரயில் குடியாத்தம்-வளத்தூா் ரயில் நிலையங்களுக்கிடையே வந்தபோது மினிமோல் பச்சைக் கொடியைக் காட்ட முயன்றுள்ளாா். அப்போது கொடியுடன் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பின்னா் பச்சைகுப்பம் ரயில் நிலையத்திலிருந்து மாற்று ரயில்வே காா்டை பணியில் அமா்த்தி ரயில் புறப்பட்டது. இதனால் ரயில் 45 நிமிஷம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும்,இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.