ஆம்பூரில் இருசக்கர வாகனங்களைத் திருடியதாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் புறவழிச்சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், அவா் முன்னுக்கு பின் முரணாகப் பதில் கூறினாா். அவரிடம் நடத்தப்பட்ட தொடா் விசாரணையில், கா்நாடக மாநிலம், பங்காருப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (35) என்பதும், அவா் ஆம்பூா் நகரில் 8 இருசக்கர வாகனங்கள் திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ஆம்பூா் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் சண்முகம் மற்றும் போலீஸாா், அருண்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து 8 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.