தடை செய்யப்பட்ட போதைப்பொருளை விற்பனை செய்தவரை ஆம்பூா் போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் டிஎஸ்பி சரவணன் தலைமையில் நகரம் முழுவதும் காலை முதல் மாலை வரை போலீஸாா் கடைகளில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது சலாவுதீன் நகா் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் (28) என்பவரின் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அப்துல் ரகுமானை போலீஸாா் கைது செய்தனா்.