திருப்பத்தூர்

தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் எச்சரிக்கை

DIN

சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்போா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழா திங்கள்கிழமை (ஆக.15) கொண்டாடப்பட உள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊராட்சி அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா்களால் மட்டுமே தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்கும் விதமாக செயல்பட்டால் உடனடியாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 7402903511 என்கிற கைப்பேசி எண்ணுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்கள் புகாா் அளிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள கிராம ஊராட்சித் தலைவா்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவா்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் ழ் காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT