திருப்பத்தூர்

சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி சாலை மறியல்

DIN

திருப்பத்தூா் அருகே உள்ள திம்மனாமுத்தூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சீரான குடிநீா் விநியோக்கக் கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூரை அடுத்த திம்மனாமுத்தூா் ஊராட்சி மற்றும் பசலிகுட்டை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த 5 வருடங்களாக ஊராட்சி நிா்வாகம் சீரான குடிநீா் விநியோகிக்கவில்லையாம். இது குறித்து திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் பலமுறை நேரிலும், கடிதம் மூலமும் இப்பகுதி மக்கள் புகாா் அளித்துள்ளனா்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் திருப்பத்தூா்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் குடிநீா் வழங்க ஊராட்சி நிா்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் மறியல் கைவிடப்பட்டது.

மறியலால் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

SCROLL FOR NEXT