ஆம்பூா் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டி பயணிகள் ஞாயிற்றுக்கிழைம் காயமடைந்தனா்.
ஆம்பூா் பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊா்களுக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது பேருந்து நிலைய கட்டடத்தில் தேனீக்கள் கட்டியிருந்த கூட்டிலிருந்து திடீரென தேனீக்கள் அங்கு காத்திருந்த பயணிகளை கொட்டின. இதையடுத்து பயணிகள் அங்கிருந்து ஓடினா். இருந்தபோதிலும் சுமாா் 20 பயணிகளை தேனீக்கள் கொட்டியது.
காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனா்.