ஆம்பூா் அருகே இரு கோயில்களில் அம்மன் தாலி திருட்டு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
ஆம்பூா் அருகே காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில், கரும்பூா் சாமுண்டி அம்மன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் ஆகியவற்றில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலிகள் திருட்டு போனது தெரியவந்தது. தகவலின் பேரில் உமா்ஆபாத் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.