திருப்பத்தூர்

அரசு மருத்துவமனைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்: திருப்பத்தூா் மருத்துவ இணை இயக்குநா்

16th Apr 2022 10:01 PM

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கொ.மாரிமுத்து திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

ஏப்ரல் மாதம் முழுவதும் ‘நமது மருத்துவமனை நமது ஆரோக்கியம்’ என்ற பெயரில் மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணி கடைப்பிடிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி மருத்துவ அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை தூய்மையாக இருந்தால்தான் நோய்த் தொற்று பரவாது. மேலும், மருத்துவமனைகளில் மரக்கன்றுகள் நடுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக மருத்துவமனையை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து மருத்துவ அலுவலருடன் ஆலோசனை நடத்தினாா்.

அதைத்தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

மருத்துவ அலுவலா் குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT