திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆட்சியா் அமா் குஷ்வாஹா முன்னிலை வகித்தாா். இதில் காவலா் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று, துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.