நாட்டறம்பள்ளி அருகே வாகன சோதனையில் 5 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் நாட்டறம்பள்ளி-குப்பம் சாலையில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டதில், லாரியில் ஆந்திரத்துக்கு கடத்த இருந்த 5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து நடத்திய விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவா் பச்சூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பிரபு (21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரைக் கைது செய்து, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.