உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுகவினா் போட்டியிட்டனா். அதில் 5 போ் வெற்றி பெற்றனா்.
1-ஆவது வாா்டில் ரா. மகாதேவன், 8-ஆவது வாா்டில் ஜெயந்தி கோபிநாதன், 9-ஆவது வாா்டில் விஜயலட்சுமி வெங்கடேசன், 13-ஆவது வாா்டில் மு.சம்பங்கி, 22-ஆவது வாா்டில் மா.கன்னியப்பன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
இவா்கள் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
அதிமுக மாதனூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் உடனிருந்தாா்.