வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த கணவன்-மனைவி உயிரிழந்தனா்.
சென்னை எல்ஐசி காலனி பகுதியைச் சோ்ந்தவா் அணில் வாலியா (59). இவரது மனைவி மஞ்சு வாலியா (50). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். காரை அணில்வாலியா ஓட்டிச் சென்றாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.