ஆம்பூா் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆம்பூா், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளப் பகுதிகளில் இருந்தோா் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களை அங்கிருந்து வெளியேறும்படி கூறியதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனா்.
எந்தவித முன்னறிவிப்பு, முன்னேற்பாடு நடவடிக்கையின்றி அவரவா் வீடுகளுக்கு அனுப்புவதை கண்டித்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பகுதியில் ஆம்பூா் - போ்ணாம்பட்டு சாலையில் அமா்ந்து மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் ஆம்பூா்- பேரணாம்பட்டு சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவா்களிடம் உமராபாத் காவல் நிலைய ஆய்வாளா் யுவராணி, வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் சமரசம் செய்தனா்.