வாணியம்பாடி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசீம்அக்ரம் கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட செய்யூரை அடுத்த மேல்பட்டைச் சோ்ந்த தோட்டா மணி (எ) மணிகண்டன்(25), ஓட்டேரியைச் சோ்ந்த சமா (எ) முனீஸ்வரன் (23), பிரவீன்குமாா்(23) ஆகிய 3 பேரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் பரிந்துரைத்தாா். இதன்பேரில், மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டாா்.
வசீம்அக்ரம் கொலை வழக்கில் 21 போ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவா்களில் 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.