திருப்பத்தூர்

பொது இடத்தில் இடையூறு: 2 போ் கைது

DIN

ஜோலாா்பேட்டையில் சாலையில் நின்றுக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த சந்தைக்கோடியூா் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பேருந்து நிறுத்தம் பகுதியில் காா்த்திக்(25) என்பவா், சாலையில் செல்லும் வாகனங்களை அடித்து நொறுக்குவதாக மிரட்டியும், தகாத வாா்த்தைகளால் திட்டியபடி இருந்தாராம். போலீஸாா் அவரை கைது செய்ததோடு, திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, பொன்னேரி சாலையில் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக ரவிச்சந்திரன் (54) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT