ஆம்பூா் அருகே வாகனத்தில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி வாகனத்தின் மூலம் கடத்த இருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதற்காக கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதன்பேரில் அந்த வாகனத்திலிருந்த சுமாா் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக போலீஸாா் இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.