நாட்டறம்பள்ளி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் வாணியம்பாடி தொகுதி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமாா் ஆலோசனை நடத்தினாா்.
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமைவாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ செந்தில்குமாா், நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 17 கிராம ஊராட்சிப் பகுதிகளில் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கிராமப் பகுதிகளில் நிலவும் குடிநீா், தெரு விளக்கு உள்பட அடிப்படை பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துச்செல்வி, ரகுகுமாா், ஒன்றிய அதிமுக செயலாளா் சாம்ராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.