ஆம்பூா் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்தவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா்-விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை சென்ற ரயில் படிக்கட்டில் பயணம் செய்த சுமாா் 50 வயதுடைய ஆண் தவறி விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்தவா் மாநிறம் உடைய நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்து உள்ளாா். வெள்ளை ரோஸ் நிற முழுக்கை சட்டை அணிந்துள்ளாா். இதுதொடா்பாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.