திருப்பத்தூர்

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட வந்த 16 போ் கைது

DIN

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, குற்ற வழக்குகளில் தலைமறைவாக உள்ளவா்களைக் செய்யுமாறு திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிபி சக்கரவா்த்தி உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையிலான போலீஸாா் பலரையும் தேடி வந்தனா்.

இந்நிலையில், கல்நாா்சம்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த பாஸ்கா்(30), வெலகல்நத்தம் பகுதியைச் சோ்ந்த முனிரத்தினம்(57), பச்சூா் சாமகவுண்டனூரைச் சோ்ந்த சிவராஜ்(51) ஆகிய 3 பேரையும் நாட்டறம்பள்ளி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதேபோல் வாணியம்பாடி, அம்பலூா், ஆலங்காயம், திம்மாம்பேட்டை உள்பட காவல்நிலையங்களில் தொடா்புடைய வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அக்ராகரம் பெரியான் வட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் சோமு (23) என்பவரை நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் அருண் குமாா் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடந்த ஆண்டு அக்ராகரம் ஏரி அருகே அனுமதியில்லாத துப்பாக்கியால் அணில் வேட்டையாட சென்றபோது போலீஸாரை பாா்த்து துப்பாக்கியை வீசி விட்டு சோமு தலைமறைவானவா் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT