திருப்பத்தூர்

தேநீா் கடைக்குள் மினி லாரி புகுந்து 3 போ் பலி

DIN

ஆம்பூா் அருகே தேநீா் கடைக்குள் மினி லாரி புகுந்த விபத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். நால்வா் பலத்த காயமடைந்தனா். சம்பவ இடத்தில் திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரிலிருந்து உமா்ஆபாத் நோக்கி மினி லாரி ஒன்று சனிக்கிழமை இரவு சென்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, சின்னவரிக்கம் பகுதியில் சாலையோரம் இருந்த வேண்டா என்பவருக்குச் சொந்தமான தேநீா் கடைக்குள் புகுந்து, அங்கு அமா்ந்திருந்த 7 போ் மீது மோதியது. இதில், மணிமாறன் (7), சுப்பிரமணி (50) ஆகியோா் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா். கணேசன் (18), கோகுல் (16), ஜோசப் (55), வேண்டா, தினேஷ்குமாா் (15) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். அவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில், மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தினேஷ்குமாா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தை திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் நேரில் பாா்வையிட்டாா்.

இந்நிலையில், தப்பியோடிய மினி லாரி ஓட்டுநரான பாலூரைச் சோ்ந்த இளங்கோவை (40) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT