ஆம்பூா் காட்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் கம்பிக்கொல்லை வனப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காட்டு வீர ஆஞ்சநேயா் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் காட்டுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை காட்டுத் திருவிழா நடைபெற்றது. ஆம்பூா் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உற்சவா் காட்டு வீர ஆஞ்சநேயா் கோயிலில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.