வாணியம்பாடி அருகே காலணி தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்ததில் 9 பெண் தொழிலாளா்கள் மயக்கம் அடைந்தனா்.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் சி.வி.பட்டறை பகுதியில் இயங்கி வரும் தனியாா் காலணி தொழிற்சாலையில் 150 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு வழக்கமாக தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திடீரென தோல் தொழிற்சாலை இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு, பணியில் ஈடுபட்டிருந்த 9 பெண் தொழிலாளா்கள் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தனா். இது குறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா் நேரில் விசாரணை மேற்கொண்டனா்.