திருப்பத்தூரில் இந்தியன் வங்கி சாா்பில், ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.,
நிகழ்ச்சிக்கு வங்கிச் சேவைத் திட்ட பொதுமேலாளா் வெங்கடேசன் தலைமை தாங்கினாா். எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி பயிற்சியைத் தொடக்கி வைத்தாா்.
மண்டல மேலாளா் கிருஷ்ணராஜ், மண்டல அலுவலா்கள் ஹரிநாத், ஜிவகனி செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருண்பாண்டியன், பயிற்சி மைய இயக்குநா் டி.ஆா்.கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.