வாணியம்பாடி: வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர திமுக பொறுப்பாளா் சாரதிகுமாா் தலைமை வகித்தாா். ஆலங்காயம் ஒன்றியச் செயலாளா் அசோகன் வரவேற்றாா். வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து கண்டன உரையாற்றினாா். மாவட்ட அவை தலைவா் முனிவேல், காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநில தலைவா் அஸ்லம்பாஷா மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
நாட்டறம்பள்ளியில்... நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்எல்ஏ சூரியகுமாா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் முத்தமிழ்செல்வி, ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் காசி, நகரச் செயலாளா்கள் கலந்துகொண்டனா்.