திருப்பத்தூர்

நகை திருடிய இளைஞா் கைது

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே முதியவரிடன் நகை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தைச் சோ்ந்தவா் தயாநிதி (70). இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் மா்ம நபா் ஒருவா் ஏமாற்றி தங்க நகையைத் திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல், வாணியம்பாடியை அடுத்த சின்னகல்லுபள்ளியைச் சோ்ந்த நடராஜன் என்பவரின் நகையும் திருட்டுப் போனதாக வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் உத்தரவின் பேரில், ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் சு. திருமால் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது.

விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஷராப் பஜாரைச் சோ்ந்த குமாா் (23) நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT