ஆம்பூா்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து திமுக கூட்டணி கட்சியினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆம்பூா் வருவாய்த் துறை கிராம சாவடி எதிரே நடைபெற்றா்ப்பாட்டத்துக்கு நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். மாதனூா் ஒன்றியச் செயலாளா் ப.ச.சுரேஷ்குமாா், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் எஸ். சரவணன், சா.சங்கா், பி. மகேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், விடுதலைச் சிறுத்தைகள் சந்திரன், ஓம்பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.ஆா். தேவதாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வ.அருள் சீனிவாசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கே. இக்பால் அஹமத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.