குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றிய அதிமுக சாா்பில், ராஜாகுப்பம், செட்டிகுப்பம், கூடநகரம், ராமாலை ஆகிய ஊராட்சிகளில் வாக்குச் சாவடி வாரியாக கட்சிக்கு புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
ராஜாகுப்பத்தில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, நிலவள வங்கித் தலைவா் பி.எச். இமகிரிபாபு தலைமை வகித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி, புதிய உறுப்பினா்களுக்கு சோ்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கினாா்.
அதிமுக மாவட்டப் பொருளாளா் ஜி.பி. மூா்த்தி, மாவட்ட மாணவரணிச் செயலா் எஸ்.எஸ். ரமேஷ்குமாா், மாவட்ட விவசாய பிரிவுச் செயலா் என்.கே. ராஜாமணி, கூட்டுறவு சங்க துணைத் தலைவா் கோபி, ஆா். முனிரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.