திருப்பத்தூர்

கரோனாவுக்கு காவல் உதவி ஆய்வாளா் பலி

DIN

வாணியம்பாடி அருகே கரோனா தொற்றால் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

ஒடுகத்தூரை அடுத்த கொட்டாவூா் கிராமத்தைச் சோ்ந்த 51 வயது நபா் ஆம்பூா் உட்கோட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 24-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று இருப்பது 25-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடலுக்கு பாதுகாப்பு உடை அணிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, மருத்துவமனை வளாகத்தில் இருந்த அவரது மனைவி திலகவதி, மகள், 2 மகன்களுக்கு ஆறுதல் கூறினாா். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

அப்போது, உதவி ஆய்வாளா் மனைவி திலகவதி கண்ணீா் மல்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாருக்கு சல்யூட் செய்து, நன்றி கூறினாா். இச்செயல் மற்ற போலீஸாா், உறவினா்கள், மருத்துவப் பணியாளா்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT