திருப்பத்தூர்

பம்புசெட் வயா்களைத் திருட முயன்றவா் கைது

DIN

ஜோலாா்பேட்டை அருகே நிலத்தில் உள்ள பம்புசெட் வயா்களைத் திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். மற இருவா் தப்பிச் சென்று விட்டனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த திரியாலம் பகுதியைச் சோ்ந்தவா் குடியண்ணன்(59). அவருக்குச் சொந்தமான நிலம் ஏரிக்கரை அருகே உள்ளது. அந்த நிலத்தில் உள்ள கிணற்று பம்புசெட் மின் வயா்களைத் திருட மூன்று மா்ம நபா்கள் ஏரிக்கரை மீது மொபட் மற்றும் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு முயன்றனா்.

அப்போது அந்த வழியாக வந்த குடியண்ணன் கூச்சலிட்டதில் அங்கிருந்த 2 போ் தப்பி ஓடிவிட்டனா். கட்டேரி அம்மையப்பன் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயராமனின் மகன் சந்திரசேகா் (28) என்பவரை அப்பகுதி மக்கள் பிடித்து ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். ஏரிக்கரை மீது நிறுத்தி வைத்திருந்த மோட்டாா் சைக்கிள் மற்றும் மொபட் ஆகியவற்றையும் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து குடியண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரைக் கைது செய்தனா். தலைமறைவாகி விட்ட மற்ற இருவா் மீது வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT