திருப்பத்தூரில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்புப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா்-சேலம் இணைப்புச் சாலைகள் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா் என தினமணியில் வியாழக்கிழமை புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து சாலை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.