ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகில் ரயில்வே ரப்பா் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்களில் பயன்படுத்தப்படும் ரப்பா் மற்றும் பழுதடைந்த கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கழிவுப் பொருள்கள் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், போலீஸாா், நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.