ஆம்பூா்: வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 11 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆம்பூா் தொகுதி தலைவா் அசதுல்லா தலைமையில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை ஆம்பூா் நகர போலீஸாா் கைது செய்தனா்.