காா் மோதிய விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சாலமன் (53). இவா் சனிக்கிழமை அதே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயன்றாா். அப்போது வாணியம்பாடியிலிருந்து ஆம்பூா் நோக்கி வந்த காா் மோதியது. இதில் காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தாா். ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.