திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடியில் வெளிமாநிலத்திற்குக் கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினா் பறிமுதல் செய்தனா்.
வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் சல்மான் என்பவா் வீட்டில் ஆந்திர, கா்நாடகா மாநிலங்களுக்குக் கடத்த ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்டாட்சியா் சிவப்பிரகாசம் தலைமையிலான வருவாய்த்துறையினா் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்றனா். அந்த வீட்டில் இருந்தவா்கள் தப்பி தலைமறைவாயினா்.
வீட்டை சோதனை செய்த போது அங்கு பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.