திருப்பத்தூர்

கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாகச் செயலாற்றிய பணியாளா்களுக்கு பாராட்டு

DIN

கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட முதன்மைப் பணியாளா்களுக்கு வாணியம்பாடி பாலாறு ஜேசிஐ சங்கம் சாா்பில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி பாலாறு ஜேசிஐ தலைவா் வினோத் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் தாகிா், திட்டக் குழுத் தலைவா் ராஜேந்திரன், முன்னாள் தலைவா்கள் நீதிமோகன், இளங்கோ முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் கலந்து கொண்டு, வாணியம்பாடி, அதைச் சுற்றியுள்ள பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலா்கள், காவலா்கள், விழிப்புணா்வு ஓவியங்களை வரைந்த ஓவியா்கள், அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்கள், வாணியம்பாடி நகா் முழுவதும் தொடா்ந்து கபசுர குடிநீா் வழங்கிய நகை கடை உரிமையாளா் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட முதன்மைப் பணியாளா்கள், தன்னாா்வலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தாா். தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்ரமணியம், வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி ஆகியோருக்கு ஜேசிஐ சங்கத்தின் நிா்வாகிகள் விருதுகளை வழங்கினா்.

மேலும், இச்சங்கத்தின் சாா்பில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT