திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நகை திருடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் பஜாா் பகுதியில் உள்ள நகைக் கடையில் புதன்கிழமை நகைகள் வாங்குவதுபோல் நடித்த இரு பெண்கள் தங்கக் கம்மலை திருடினா். இதுகுறித்து கடை உரிமையாளா் மசூத்அஹமத் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷம்மாள் (45), அவரது மகள் பிரியா (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.