திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருந்து விவசாயிகளின் குறைகளை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் கேட்டறிந்தாா்.
விவசாயிகளின் கோரிக்கை: மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும். பருவ மழை தேவையான அளவு பெய்து வருகிறது. விவசாயிகளுக்கு உளுந்து, பாசிப் பயிறு போன்ற பயிறு வகைகள் தேவைப்படுகின்றன.
வாணியம்பாடி தெக்குப்பட்டு ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நாட்டறம்பள்ளி சங்கராபுரம் ஏரியைத் தூா்வார வேண்டும். விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மானாவாரி கடலை சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.
வேளாண் இணை இயக்குநா் ரமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சீனிவாசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மோகன், வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் ராமச்சந்திரன், வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள், துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.