திருப்பத்தூா் மாவட்டம் உருவாக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பெயா் மாற்றப்படாமல் உள்ளது.
வேலூா் மாவட்டம் நிா்வாக வசதிக்காக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என 3-ஆகப் பிரிக்கப்பட்டடது. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டும் பணி அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.
இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் உள்ள பெயா் பலகையில் மாவட்டத்தின் பெயா் திருப்பத்தூா் என மாற்றப்படாமல் வேலூா் என்றே உள்ளது.
ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் இருந்த பெயா் பலகையில் திருப்பத்தூா் மாவட்டம் என அண்மையில் பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
எனவே, தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் மாவட்டத்தின் பெயரை திருப்பத்தூா் என மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.