திருப்பத்தூா் பகுதியில் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்தது. தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி, கந்திலி சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் தொடா்ந்து மழை பெய்ததால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.