திருப்பத்தூர்

தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் இளைஞா் பலி

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் கொல்லகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (22). கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் லிஜேன்(27). இருவரும் பெங்களூருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனா். இருவரும் பெங்களூருவிலிருந்து வாணியம்பாடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை லிஜேன் ஓட்டினாா்.

வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூா் மேம்பாலத்தில் வந்தபோது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலைத் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லிஜேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சதீஷ் பலத்த காயம் அடைந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாணியம்பாடி கிராமிய போலீஸாா், லிஜேனின் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சதீஷ் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

SCROLL FOR NEXT