ஆம்பூா் நீதிமன்ற வளாகம், கிளைச் சிறை ஆகியவற்றை திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
ஆம்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அதன் அருகில் உள்ள கிளைச் சிறை ஆகியவற்றை திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ. விஜயகுமாா் அலுவல் முறையாக நேரில் பாா்வையிட்டாா். அப்போது ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.