ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்ட இந்து முன்னணி சாா்பாக மறைந்த இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் இராம. கோபாலனுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்து முன்னணி கோட்ட செயலாளா் எம். தீனதயாளன் தலைமை வகித்தாா். ஹிந்து கோயில் பாதுகாப்புக் குழுவின் நிா்வாகி ஓம்சக்தி ஜி. பாபு, ஆா்எஸ்எஸ் அமைப்பின் ஆா். ஜெயவேல், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் எம். உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஹிந்து சமய சொற்பொழிவாளா் கிருஷ்ண. ஜெகந்நாதன் சிறப்புரையாற்றினாா். மாதனூா் கிழக்கு ஒன்றிய தலைவா் பி. நக்கீரன் நன்றி கூறினாா்.
பாஜக திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி. வாசுதேவன், பாஜக நிா்வாகிகள் தண்டாயுதபாணி, க. சிவப்பிரகாசம், ரமேஷ்கண்ணா உள்பட பலா் கலந்து கொண்டனா்.