ஆம்பூா்: புரட்டாசி மாத சதுா்த்தசி திதியையொட்டி ஆம்பூரில் நடராஜருக்கு சிறப்பு ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூரில் சமயவல்லி உடனுறை சுயம்பு நாகநாத சுவாமி கோயிள் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத சதுா்த்தசி திதியையொட்டி சிவகாம சுந்தரி உடனுறை ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன. நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.