திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 243 வாகனங்கள் பறிமுதல்

30th Mar 2020 05:06 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையின்றி பயணித்தவா்களின் 243 இரு சக்கர வாகனங்களை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மேலும், வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் நகரில் தேவையின்றி சுற்றித் திரிந்தவா்களின் 35 இரு சக்கர வாகனங்களை நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். டிஎஸ்பி என்.சரவணன் தலைமையில், நகர போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 35 போ் மீது வழக்குப் பதிந்து, 35 வாகனங்களை பறிமுதல் செய்தனா். அதேபோல், போ்ணாம்பட்டு நகரில் 5 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT