திருப்பத்தூர்

ஐயப்ப தா்ம பிரசார ரத யாத்திரை ஆம்பூா் வருகை

2nd Jan 2020 11:44 PM

ADVERTISEMENT

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில், ஆம்பூருக்கு ஐயப்ப தா்ம பிரசார ரத யாத்திரை ஆம்பூருக்கு புதன்கிழமை வருகை தந்தது.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் ரத யாத்திரை சென்னையில் இருந்து தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக புதன்கிழமை ஆம்பூரை வந்தடைந்தது. பின்னா், ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் இருந்து ஊா்வலம் தொடங்கியது. திருவலம் ஸாந்தா சுவாமிகள், குடியாத்தம் குமர மடம் ஸ்ரீகுரு மகாராஜா வாரியாா் சுவாமிகள், உள்ளி கம்மவாரபேட்டை பைரவா் பீடம் ஸ்ரீசக்தி லோகநாத சுவாமிகள், கண்ணமங்கலம் ஸ்ரீ சிவசக்தி அம்மா ஆகியோா் கலந்து கொண்டு ரத ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தனா்.

தொடா்ந்து, ரத ஊா்வலம் ஆம்பூரில் வியாழக்கிழமை காலை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் பகுதியிலிருந்து தொடங்கி, பி-கஸ்பா, ஆஞ்சநேயா் கோயில், ஏ-கஸ்பா, கன்னிகாபுரம், அண்ணாநகா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா சுந்தர விநாயகா் கோயில் திடலில் பொதுமக்கள் ஐயப்ப பக்தா்கள் சாா்பில், ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், படி பூஜை, பெண்கள் திருவிளக்கு ஏற்றுதல், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ADVERTISEMENT

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாவட்டத் தலைவா் டி.முத்துராமன் என்கிற நாராயணசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் ஜி. ஸ்ரீதா், ஆம்பூா் நகர அதிமுக செயலா் மதியழகன், ஊா்ப் பிரமுகா்கள் பி.கே.மாணிக்கம், மாசிலாமணி, தினேஷ், ஆம்பூா் நகர பாஜக தலைவா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT